திருக்குறள் கூறும் மருத்துவம்
-
- £0.99
-
- £0.99
Publisher Description
ஒவ்வொரு விசயத்தையும் விரிவாகவும், பல அதிகாரங்களாகவும் விரித்து விளக்கிய திருவள்ளுவர், மனிதர்களின் ஆரோக்கியம் என்று வரும் போது மிகச் சுருக்கமாக, ஒரே அதிகாரத்துடன் முடித்துக் கொள்கிறார்.
அதிகாரத்தின் தலைப்பு “மருந்து” ஆனால் உட்கொள்ளக்கூடிய, அல்லது உடலின் வெளிப்புறமாகப் பயன்படுத்தக்கூடிய எந்த மருந்தையும் அவர் பரிந்துரைக்கவில்லை. மனிதர்களின் நோய்களைக் குணப்படுத்த எந்தெந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றோ, இவ்வாறான மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றோ அவர் எதையுமே பரிந்துரைக்கவில்லை.
மருந்து அதிகாரத்தில், மனிதர்கள் இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஒழுக்கங்களையும், மனிதர்களுக்கு நோய்களை உண்டாகக்கூடிய காரணங்களையும், நோய்கள் அண்டாமல் தவிர்க்கும் வழிமுறைகளையும், ஒருவேளை நோய் உண்டானால் அதனைக் குணப்படுத்தக் கூடிய எளிய வழிமுறைகளையும் மட்டுமே விளக்குகிறார்.
திருவள்ளுவர் எதனால் எந்த மருந்தையும் பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்தது, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு தோன்றிய புரிதல். மருந்து அதிகாரத்தின் பத்துக் குறள்களிலும் கூறப்படும் ஒழுக்கங்களை முழுமையாகப் பின்பற்றினால், உடலின் உள்ளேயும் வெளியிலும் எந்த நோயும் உண்டாகாது. ஒருவேளை தற்போது நோய் உள்ளவர்களாக இருந்தால் அது எளிதாகக் குணமாகிவிடும்.